சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இது 31வது வருடம். சேத்துப்பட்டு பச்சையப்பன் கல்லூரி அருகே செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் இவ்வாண்டு கண்காட்சி நடக்கிறது.
நல்ல இடவசதி உள்ள பெரிய மைதானம். சென்ற ஆண்டும் இங்கேதான் நடைபெற்றது. சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து நடந்துவருகிற தூரம்தான். சென்னையின் அனைத்து முக்கிய இடங்களிலிருந்தும் பேருந்து வசதி இருக்கிறது.
சென்ற ஆண்டு சுமார் நாநூறு பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் கண்காட்சியில் பங்குபெற்றனர். இவ்வாண்டு இவ்வெண்ணிக்கை ஐநூறைத் தாண்டும் என்று சொல்கிறார்கள்.
மொத்தம் எத்தனைப்பேர் பங்கேற்கிறார்கள், யார் யார் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்பது போன்ற விவரங்கள் இம்மாதம் 29-30 தேதிகளில் தெரியவரும்.
புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் இணையத்தளத்தில் இவ்வாண்டுக் கண்காட்சி குறித்த தகவல்கள் எதுவும் இன்னும் வலையேற்றப்படவில்லை. கூடுமானவரை கண்காட்சி குறித்த எந்தத் தகவலும் விடுபடாமல் இப்பதிவுகளில் இடம்பெற முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம்.
பதிப்பாளர்களிடம் அவர்களுடைய கண்காட்சி சிறப்பு வெளியீடுகள் குறித்த விவரங்கள் கேட்டிருக்கிறோம். கிடைக்கும்போதெல்லாம் இங்கு அப்டேட் செய்யப்படும்.
செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்
Sunday, December 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment