கண்காட்சி வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற பல விளம்பரப் பலகைகளுள் “கவிப்பேரரசு” வைரமுத்துவினை “தமிழின் நிகழ்காலம்” என்று குறிப்பிட்டுப் போற்றும் பலகை பலரது கவனத்தினைக் கவர்ந்துள்ளது. இப்பலகை, கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ள இடத்தின் பக்கத்திலேயே அமைந்துள்ளது.
வழக்கத்தில் இல்லாதபடி இந்த விளம்பரப் பலகைக்கான புகைப்படத்தில் மட்டும் “கவிப்பேரரசு” அவர்கள் கலைஞரைப் போலவே கறுப்புக் கண்ணாடி அணிந்து காட்சியளிப்பதைச் சுட்டிக்காட்டிய பல திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், “இவர் நிகழ்காலம் என்றால் எங்கள் தலைவர் என்ன, இறந்தகாலமா?” என்று ஆற்றாமையுடன் கேட்டனர்.
இதே விளம்பரப் புகைப்படத்தினை இவர்கள் சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களிலும் பொருத்தியிருக்கின்றார்கள். “தமிழில் இன்று எழுதிக்கொண்டிருக்கும் அத்தனை பேரும் வீண் என்று சொல்வது போல் அல்லவா இருக்கின்றது இது?” என்று புத்தகக் காட்சி வளாகத்தில் பலர் குறைப்பட்டுக்கொண்டனர்.
செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்
Thursday, January 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Bapasi.com தளத்தில் இருந்து:
//புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கடைகளின் பட்டியல், அவை இருக்கும் இடம், அங்கே கிடைக்கும் புத்தகங்களின் விவரம் போன்ற அனைத்தும் இந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் தனக்குத் தேவையான புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை இதன்மூலம் உடனே தெரிந்து கொள்ளலாம்//
தளம் முழுக்க தேடிவிட்டேன். புத்தகப்பட்டியலோ, அவை எந்தெந்தக் கடைகளில் கிடைக்கும் என்ற விவரமோ எங்கும் கிடைக்கவில்லை. பபாசி அமைப்பினர்தான் விளக்க வேண்டும்.
அன்புடன்
வெங்கட்ரமணன் (venkatramanan@gmail.com)
Bapasi.com தளத்தில் இருந்து:
//புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள கடைகளின் பட்டியல், அவை இருக்கும் இடம், அங்கே கிடைக்கும் புத்தகங்களின் விவரம் போன்ற அனைத்தும் இந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளன. ஒருவர் தனக்குத் தேவையான புத்தகம் எந்தக் கடையில் கிடைக்கும் என்பதை இதன்மூலம் உடனே தெரிந்து கொள்ளலாம்//
தளம் முழுக்க தேடிவிட்டேன். புத்தகப்பட்டியலோ, அவை எந்தெந்தக் கடைகளில் கிடைக்கும் என்ற விவரமோ எங்கும் கிடைக்கவில்லை. பபாசி அமைப்பினர்தான் விளக்க வேண்டும்.
அன்புடன்
வெங்கட்ரமணன் (venkatramanan@gmail.com)
Post a Comment