
புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்தில், அரங்குகள் அமைந்துள்ள விதத்தை விளக்கும் வரைபடம் மேலே தரப்பட்டுள்ளது. இம்முறை ஆறு வாயில்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு வாயிலுக்கும் தனியே டிக்கெட் கவுண்ட்டர் அமைக்கப்படுகிறது. இந்த ஆறு டிக்கெட் கவுண்ட்டர்களையும் Prodigy Books என்னும் புதிய நிறுவனம் ஸ்பான்சர் செய்கின்றது.
அரங்க வளாகத்தின் நடுவே கருப்பு மை பூசப்பட்டுள்ள வரிசைதான் பிரபல பதிப்பகங்களுடையது. இந்த அரங்குகள் ஒவ்வொன்றும் 20 X 20 அளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெரிய அரங்கங்கள் மட்டும் இரு புறமும் திறந்த நிலையில் வடிவமைக்கப்படுகின்றன. மற்ற சிறு அரங்குகளுக்கு ஒரு புற வாயில் மட்டுமே உள்ளது.
No comments:
Post a Comment