அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புத்தகக் கண்காட்சி விருது குறித்த அறிவிப்பு இன்று வந்துவிட்டது.
ஐந்து படைப்பிலக்கியவாதிகளுக்குத் தலா ஒரு லட்சம் விருது வழங்கப்பட உள்ளது. அவர்கள் குறித்த விவரம் வருமாறு:-
1. மா.சு. சம்மந்தம்
2. கவிஞர் புவியரசு
3. மு. ராமசாமி
4. சு. தமிழ்ச்செல்வி
5. சாரா ஜோசப் (மலையாள எழுத்தாளர்)
இவர்களுள் மு. ராமசாமி அவர்கள் சிறந்த நாடகங்கள் பலவற்றைப் படைத்து புகழ்பெற்றவர். புவியரசு அவர்கள் கழிந்த பத்தாண்டு காலமாக கண்ணதாசன் பதிப்பகத்தாருக்காக ஆங்கில சுய முன்னேற்ற நூல்களையும் ரஜனீஷ் அவர்களது நூல்களையும் மொழிபெயர்த்து படைப்பிலக்கியப் பங்காற்றியவர். சாரா ஜோசப் பிரபல மலையாள எழுத்தாளர். மா.சு. சம்மந்தம் என்பாரும் தமிழ்ச்செல்வி என்பாரும் யார், படைப்பிலக்கியத் துறையில் என்ன பங்களிப்பு செய்திருக்கிறார்கள் என்கிற விவரம் நாளை விழா மேடையில் அறிவிக்கப்படும்.
செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்
Thursday, January 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
tamilselvi's books: http://www.anyindian.com/advanced_search_result.php?keywords2=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF
தகவலுக்கு நன்றி திரு. ஹரன்பிரசன்னா.
Post a Comment