புத்தகக் காட்சி இன்று மாலை தொடங்கவிருக்கிற நிலையில் சென்னையில் இன்று நல்ல மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு 11 மணி அளவில் மழை ஆரம்பித்தது. விட்டு விட்டுப் பெய்தாலும் தொடர்ச்சியாக மழை இருக்கிறது.
இன்று காலை முதல் கனமழை பெய்கிறது. புத்தகக் காட்சிக்குப் புத்தகங்களை எடுத்துச் செல்வதிலும் அங்கு இறுதிக்கட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும் இதனால் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மதியத்துக்குள் மழை விட்டுவிட்டால் மாலை விழா தொடங்குவதில் மேலதிகப் பிரச்னைகள் இராது. மழை நீடிக்குமானால் தொடக்க நாள் நிகழ்ச்சிக்கு மக்கள் வருவது தடைப்படும்.
செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்
Friday, January 4, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment